my day to day experiences

Tuesday, January 21, 2014

காயத்திரியின் கல்யாணம்

என்னுடைய மூன்றாவது சிறுகதையில் சந்திப்பதில் மகிழ்ச்சி. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்.



முதல் கதையை படிக்க இங்கு கிளிக்கவும்… CLICK HERE FOR FIRST STORY….


இரண்டாவது கதையை படிக்க இங்கு கிளிக்கவும்.CLICK HERE FOR SECOND STORY



காயத்திரியின் கல்யாணம்



Aக வேண்டும். எந்த ஒருக் குறையும் இல்லாமல் திருமணம் ஏன் தடை படுகிறது? என்றால் அதற்கான விடை இறைவன் ஒருவனிடத்தே தானே இருக்கிறது.


“இன்னும் அரை மணி நேரத்தில் வந்துடுவாங்க... சீக்கிரம்...” என்ற படியே சமையலறை சென்றாள் கற்பகம்.


திருமணமாகவில்லையே என்ற கவலை மனதில் இருந்தாலும் அதை துளியும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டாள் காயத்திரி. “தன்னை விட்டால் இப்படியே சுதந்திரமாய் இருந்துவிடுவேன் திருமணம் ஒருப் பெண்ணை அடிமை ஆக்கிவிடும்” போன்ற பெண்ணியச் சிந்தனைச் செடிகள் மனதில் இருந்தாலும் தாய் தந்தையின் ஏக்கங்களுக்காக அவற்றிற்கு நீரூற்றாமல் இது நாள் வரை இருந்து வருகிறாள் காயத்திரி.


பத்து நிமிடங்கள் கழித்துக் காசிநாதனின் கைபேசி அலறியது. ஆர்வத்துடன் எடுத்த காசிநாதன் பேசப் பேச முகம் சுருங்கியது “சரிங்க...” என்று வைத்த நொடியில் யார் என்றால் கற்பகம்.


“ப்ரோக்கர் பரமசிவன்....”


“என்னவாம்...? கிளம்பிட்டாங்கலாமா...? எங்க வராங்கலாம்...? என்று கேள்விகளை அடுக்கினால் கற்பகம்.


“வர வழில கார் பஞ்சர் ஆய்டுச்சாம்... இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகுமாம்...” என்றார் சுருதிக் குறைவாக. “கடவுளே உனக்கு என்ன குறை வச்சோம்... இப்படி எங்க மகளை சோதிக்கரையே... “ என்று புலம்ப ஆரமித்து விட்டால் கற்பகம்.


“என்னப்பா இதுவும் புஸ்ஸ்ஸா...” என்று கிண்டலாக கேட்டாள் காயத்திரி.


“இல்லமா... இன்னும் இரண்டு மணி நேரத்துல வந்துட்ராங்கலாம்” என்று தன் மகளுக்கு ஆறுதல் கூறுவதுப் போல் தன்னையே தேற்றிக்கொண்டார் காசிநாதன்.


“அடப் போங்கப்பா நீங்க வேணும்னாப்  பாருங்க பொண்ணோட ராசி சரியில்ல இந்த இடம் வேண்டாமென்று சொல்லிட்டாங்க மாப்பிள்ளை வீட்டுகாரங்கன்னு ப்ரோக்கர் அடுத்து போன் பண்ணுவார் பாருங்க” என்றால் காயத்திரி.


இது கிண்டலுக்காக அல்ல, விரக்தியின் வெளிப்பாடு என்றுத் தெரியாதவர் அல்ல காசிநாதன். அதனால் ஏதும் பேசாமல் சென்றுவிட்டார்.


இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறதே என்று தன் டைரியை எடுத்தால் காயத்திரி. ஆம், காயத்திரிக்கு உற்ற தோழன் என்றால் அந்த டைரிதான். காயத்திரியுடைய சிரிப்பு, கோபம், அழுகை, வெட்கம், வீரம் என அனைத்தும் அறிந்து வைத்திருந்தது அந்த டைரி அவளின் எழுத்தினால். எந்த ஒரு நிகழ்வானாலும் அதை அந்த டைரியில் ஏற்றிவிடுவாள்  எழுத்துக்களாய். அதனால்தான் என்னவோ திருமணத் தடங்கலுக்கானத் தடையம் சிறிதும் அவள் முகத்தில் இருப்பதில்லை.


டைரியை திறந்த உடன் பதினேழாம் மாப்பிள்ளை பக்கம் வந்தது......


“ஏம்மா... உனக்கு சாமி கும்முடனும்னா நீ மட்டும் வர வேண்டியது தானே எதுக்கு என்னை இந்த கூட்டத்துல கூட்டி வந்து அல்லோலகப் படுத்துற???” என்று சாமியை தரிசித்து விட்டு கடிந்துக் கொண்டால் காயத்திரி.


“எல்லாம் உனக்காக தாண்டி... எந்த வரணும் உனக்கு பொருந்த மாட்டுது... நாளைக்கு வரப் போற மாப்பிள்ளையாவது  உனக்கு முடியனும்... அதுக்கு தான் உன்ன கூட்டிட்டு வந்தேன்... சும்மா சிலுத்துகர...” என்றால் கற்பகம்


“ஆமா... முடிஞ்சிட்டாலும்” என்றால் வெறுப்பாக. ஒவ்வொரு முறையும் துணிக் கடை பொம்மைப் போல் சீவி சிங்காரித்து அவையில் நின்றுப் போலியான வெட்கத்தை வெட்கத்துடன் வெளிக்காட்டி..... மதிக்காமல் வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்லும் மாப்பிள்ளைகள் மேல் வெறுப்பு வரத்தானேச் செய்யும்.


வீட்டுக்கு கிளம்பலாம் என்று எழும்போது காயத்திரியுடன் கல்லூரியில் படித்தத் தோழி மீனா... காயத்திரியை தற்செயலாக பார்த்தால்


ஹே...!!! காயு.... வாட் எ ப்லசன்ட் சர்ப்ரைஸ்....(what a pleasant surprise) எப்டி இருக்க... எவ்ளோ நாள் ஆச்சு பாத்து....” என்று மீனாக் கூறக் களிப்பில் “நல்லா இருக்கேண்டி... எப்போ அமெரிக்காலேர்ந்து வந்த” என்றால் ஆர்வமாக “ஒரு வாரம் ஆகுதுடி அம்மா அப்பாவப் பாக்க இந்தியா வந்தேன்...” என்றால் இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் மீனாவை ஒரு நான்கு வயதுச் சிறுவன் ஐந்து முறைக்குமேல் உரிமையாகச் சுற்றினான். அதைப் பார்த்த காயத்திரி “யார்டி உன் பையனா?” என்று அவனின் கன்னத்தில் முத்தமிட்டால். முத்தமிட்ட எச்சிலை துடைத்து கேள்வி குறியுடன் காயத்திரியைப் பார்த்தான் அந்தச் சிறுவன். “ஆமாண்டி... என் பிள்ளைத் தான்.... உன் குழந்தைங்க எங்கடி.... ? விளையாட்ராங்களா???” என்றப்படியே இருமுறை எட்டிப் பார்த்தால் மீனா.


“அடியே... ஐ யாம் எ ப்ரீ பேர்ட் ( I Am A Free Bird )....இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல” என்று நகைத்தாள் காயத்திரி.


“எங்கம்மா.... எவ்ளோ பேரு வந்து பாக்குறாங்க ஒரு வரன் கூட அமைய மாட்டேங்குது” என்று புலம்பலை ஆரம்பித்தால் கற்பகம். சற்று சுதாரித்துக் கொண்டு “கவலைப் படாதீங்க ஆண்ட்டி (aunty) சீக்கிரம் செட் ஆய்டும்.... அவர் தேடுவாரு உன் கல்யாண இன்விடேஷனோட மீட் பண்லாம்.... ஆல் தி பெஸ்ட்” என்று நகர்ந்தால் மீனா.


“உன் வயசு பொண்ணுங்க குடியும் குடுத்தணுமா இருக்குங்க... உன்ன மட்டும் ஆண்டவன் இப்படி சோதிக்கிறானோ....” என்று கற்பகம் ஆரம்பிக்க “அம்மா போதும் ஆல்ரெடி சாமி கிட்ட புலம்பியாச்சு...” என்றால் காயத்திரி.


“உனக்கு எங்கேர்ந்து தெரியப்போது என்னோட கஷ்டம்.... நாளைக்கு வரப்போற மாப்பிளையாவது அமையனும்.... என்ன குறை இருந்தாலும் ஒத்துக்க...” என்றால் கற்பகம்.


“ஆமா இவ்ளோ நாள் குறை சொல்லி நான் தான் தட்டி கழிச்சேன் பாரு.....” என்று இருவரும் வீட்டுக்கு நடையைக் கட்டினர்.


வழக்கமானப் பரபரப்புடன் பதினேழாவது மாப்பிள்ளையும் வந்தார் காயத்திரியைப் பார்க்க. ”பொண்ண அழைச்சிகிட்டு வாங்க” என்று கணீர் குரல் ஒலிக்க கற்பகம் காயத்திரியை அழைத்து வந்தால்.


“வணக்கம் சொல்லுமா” என்று கற்பகம் கூற அவையில் அனைவரையும் வணங்கினால் காயத்திரி.


சற்று நிலவுக்கே சவால் விடும் ஒளிவீசும் முகத்தை நிமிர்த்தி மாப்பிள்ளையை பார்த்த காயத்திரிக்கு அதிர்ச்சி. பதினேழாவது மாப்பிள்ளைக்கு படிய வார முடி இல்லை வழுக்கைத் தலை. அப்போது தான் “என்ன குறை இருந்தாலும் ஒத்துக்க” என்று அம்மா சொன்ன வார்த்தைகள் ரிபீட் மோடில் ( REPEAT MODE ) ஒலிக்கும் பாடல் போல திரும்பத் திரும்ப ஒலித்தன.


சர்வ லட்சணம் பொருந்தியப் பெண்கள் அவலட்சனமிகுந்த ஆண்களை எப்படி திருமணம் செய்திருப்பார்கள் என்றப் பல நாள் கேள்விக்கான விடை அப்போது தான் அவளுக்கு தெரிந்தது.


சிறிது நேரம் கழித்து அந்த அவலட்சணம் மற்றொரு அவலட்சனத்தின்க் காதை கடித்தது. உடனே “சரி நாங்க கிளம்பறோம்.... போய்விட்டு போன் செய்றோம்” என்றது மீண்டும் அந்த கணீர் குரல்.


அவர்கள் சென்று மூன்றாவது மணி நேரத்தில் கைப்பேசியில் ப்ரோக்கர் பரமசிவன் “அய்யா... பாப்பா ஒல்லியா இருக்குதுன்னு மாப்பிள்ளை வீட்ல நினைக்கிறாங்க அதனால  நம்ம வேற இடம் பாத்துக்கலாம் அய்யா” என்றுப் போனை கட் செய்தார்.


“என்னதான் பண்றது.... எப்படி தான் இவளக் கரை ஏத்தப் போறமோ...” என்று தலையில் கை வைத்து அமர்ந்தார்க் காசிநாதன்.


“ஏங்க நம்ம ஜோசியர் குருசாமி கிட்ட போயிட்டு இவளுக்கு எப்ப தான் கல்யாணம் நடக்கும்ன்னு கேட்டு வரலாமா...?” என்றால் கற்பகம்.


“சரி வா...” என்று காயத்திரியின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியர் வீட்டுக்கு சென்றனர் இருவரும்.


கிரகக் கணக்கு, மனக் கணக்கு, விரல் கணக்கு என்றுப் போட்டு “அருமையான ஜாதகம்” என்று ஜாதகத்தை கீழே வைத்தார் ஜோசியர் குருசாமி.


அதைக் கேட்டு பூரிப்படைந்தனர் இருவரும் “எங்க சாமி கல்யாணம் தள்ளி போய்ட்டே இருக்கு எதாவது தோஷம் கீஷம் இருக்கானுப் பாருங்களேன்” என்றால் கற்பகம்.


“தோஷமா...? நீங்க ஒன்னு.... ஆத்துலப் போற தண்ணி மாதிரி தெளிவா இருக்கு ஒரு பிரச்சனையும் இல்ல” என்றார் ஜோசியர் குருசாமி.


“பின்ன... ஏன்தான் திருமணம் தள்ளி போய்ட்டே இருக்கு?” என்று காசிநாதன் கேட்க “எல்லாத்துக்கும் ஒரு நேரமன்னு வரணும்ல... தை மாசம் குருபலன் வருது... தைப் பொறந்தா வழிப் பிறக்கும் போங்க” என்று ஜோசியர் குருசாமிக் கூறி அவர்களை தேற்றினார்.


வீட்டுக்கு வந்து ஜோசியர் குருசாமி கூறியதை காயத்திரியிடம்க் கூறினால் கற்பகம் “அடப் போமா நீங்களும் உங்க ஜாதகமும்” என்றப் படியே தன் டைரியை எடுத்து எழுதத்  தொடங்கினால் காயத்திரி.


            வாழ்க்கை என்னும் கடலை


            ஒரேக் கப்பலை வைத்துக் கடக்க முடியாது


            அதுவும் பெண்களால் முடியவே முடியாது


            பெற்றோர் என்னும் கப்பல் என் பாரம் தாங்காமல்


            என்னை மற்றொரு கப்பலில் ஏற்றப் பார்கிறார்கள்


            அது ஓட்டைக் கப்பல் என்று தெரிந்தும் கூட


            கப்பலேத் தேவையில்லை நீந்தியே


            கரையை கடப்பேன் நான்.... விடுவார்களா???


            பெண்ணிற்க்கான சாபக்கேடுத்தானே இது...


            பதினாரு முறைப் படை எடுத்து


            இந்தியப் பெண்ணை ( நாட்டை ) கவர்ந்தானம் கஜினி முகமது


            பதினேழு முறை மாப்பிள்ளைகள் படை எடுத்தும்


            இந்தப் பெண்ணை கவர முடியவில்லை – இதிலிருந்து


            என் அருமை புரியும், நான் யாரென்று தெரியும்  


                                                                 ---- காயத்திரி


என்று படித்து முடித்தால். “பதினெட்டாம் மாப்பிள்ளை” ன்னு தலைப்பு போட்டுடனும் போலயே  காயு.... என்று மனதிற்குள்ளேயே கூறிக் கொண்டால்.


கார் சத்தம் கேட்டது “அவுங்க வந்துட்டாங்க...” என்றுக் கூறிக் கொண்டே மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க்க வாசல் வரைச் சென்றார் காசிநாதன்.


பதினெட்டாம் மாப்பிள்ளையும் அவரது வீட்டாரும் வந்து வீட்டினுள் அமர்ந்தனர் ”பொண்ண அழைச்சிகிட்டு வாங்க” என்று ப்ரோக்கர் பரமசிவனின் கணீர் குரல் ஒலிக்கக்  கற்பகம் காயத்திரியை அழைத்து வந்தால் “வணக்கம் சொல்லுமா” என்று கற்பகம் கூற அவையில் அனைவரையும் வணங்கினால் காயத்திரி.


“இவரு..... தான்மா.... மாப்பிள்ளை பேரு மணிகண்டன்...” என்று பரமசிவன் அறிமுகம் செய்ய தலை நிமிர்ந்து மணிகண்டனைப் பார்த்தால் காயத்திரி. இத்தனை நாள் காத்திருப்புக்கு பலன் கிடைத்தார்ப் போல் அழகிய உருவம், திரண்ட கன்னம், அடர்த்தியான முடி, என சர்வலட்சனமும் பொருந்த இருந்தான் மணிகண்டன்.


“அண்ணனும் நோக்கினால் அவளும் நோக்கினால்” என்றப் படி இருவரும் பார்க்க பலக் கோடி யூனிட் மின்சாரம் இருவர் கண்களுக்கும் இடையே கடத்தியே இல்லாமல் கடந்துச் சென்றது.


“என்னப்பா பொண்ணப் புடிச்சிருக்கா?” என பரமசிவன் கேட்க “புடிச்சிருக்கு” என்று பொட்டில் அடித்தார்ப் போல பதில் வந்தது மணிகண்டனிடமிருந்து.


   பதினெட்டாம் படி ஏறி மணிகண்டனை தரிசித்து விட்டால் போலும் நம் காயத்திரி.


தைப் பிறந்ததும் வழிப் பிறக்கும் என ஜோசியர் குருசாமி சொன்னதுப்  பலித்துவிட்டது.


அப்புறம் என்னங்க.... இன்னும்... எல்லாரும் காயத்திரி மணிகண்டன் கல்யாணத்துக்கு வந்து ஆசிர்வாதம் பண்ணிடுங்க பத்திரிக்கை வைக்க உங்க வீட்டுக்கு விரைவில் வருவோம்


இங்ஙனம் உங்கள் வரவை எதிர்நோக்கும் காயத்திரியின் தம்பி


ஸ்ரீ 


PAINTING CREDITS: ILAYARAJA


PLEASE COMMENT DOWN….


FORGIVE TYPO ERRORS


CLICK FOLLOW TO GET UPDATES ABOUT MY PAGE

Friday, January 10, 2014

அப்பா... மகன்...

என் முதல் சிருகதையை படித்து விமர்சனம் கூறியதற்கு மிகுந்த நன்றிகள். இரண்டாவது சிருகதையுடன் உங்களை சந்திப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி. இதை படிக்கத் தொடங்கும் முன்பு முதல் கதையின் அனுபவத்தை அடியோடு மறந்திடுங்கள்.

BOTH ARE DIFFERENT GENRE SO MAKE YOUR EXPECTATION TO ZERO GRADE AND PROCEED.



முதல் கதையை படிக்க இங்கு கிளிக்கவும்.... CLICK HERE FOR FIRST STORY….




அப்பா… மகன்…


72ace-images6987


“இந்த மிடில் கிளாஸ் வாழ்க்கைய ஏன்தான் படைத்தானோ ஆண்டவன்  தினம் செத்து பிழைக்கவேண்டியதா இருக்குது” என்று புலம்பி கொண்டே அலுவலகத்திற்கு புறப்பட்டு கொண்டிருந்தார் ராஜன்.


அடர்ந்த மீசை, குள்ளமான தோற்றம், எப்போதும் “ஏன் தான் இந்த வாழ்க்கையோ ?” என்ற கேள்வியோடு முகம் என்று அடையாளம் சொன்னால் புதிய மனிதர் கூட எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் நம் ராஜனை. தமிழாள் தானே நீங்க......என்று கேட்கும் அளவுக்கும் பாரம்பரியத்தைச் சுமக்கும் மனைவி லட்சுமி, பல வருடங்களுக்கு முன்னரே தோளுக்கு மேல் வளர்ந்த (ராஜன் குள்ளமானவர் என்பதை மனதில் கொள்ளவும்) பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் மகன் கோகுல். அரசின் அறிவுரை படி “நாம் இருவர், நமக்கு ஒருவர்” என்பதை பின்பற்றி வாழ்ந்தாலும் அரசு கொடுக்கும் சம்பளத்தில் மட்டும் வாழமுடியவில்லை. அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருந்த இத்தனை வருடத்தில் மகனின் படிப்பை தவிர சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி இல்லை.


அப்படி என்னதான் அப்பாவுக்கும் மகனுக்கும் பொருத்தமோ... எப்பொழுதுமே பிரச்சனை என்ற வருத்தம் ராஜனின் மனைவி மனதை வாட்டி எடுத்துக்கொண்டு இருக்கிறது. ஆம், ராஜனும் கோகுலும் எலியும் பூனையும் போல.... இருவருக்கும் ஏழாம் பொருத்தம். எப்போதும் தன் மகனை காரணமின்றியே கரித்துக்கொட்டி கொண்டே இருப்பார் ராஜன். சரி அவர் தான் அப்படி அவர் குணத்தை அறிந்து அனுசரித்து செல்லாமல் அவர் மகன் கோகுலும் ஏட்டிக்கு போட்டியாக நடப்பான். இவர்கள் பிரச்சனைகளில் மத்தியஸ்தர்களாக வருபவர்கூட யார் சரி யார் தவறு என்று கூற முடியாத அளவு உப்புச் சப்பு இல்லாத சண்டைகளாக இருக்கும்.


“என் வாழக்கை சிறைப் பட்ட நாளை குறிக்க இருந்தது இந்த ஒரு வாட்ச் மட்டும் தான்.... நாலு வருஷமா இது கூட மக்கார் பண்ண  ஆரமுச்சிடுச்சு” என்று தன் கல்யாண நாள் அன்று பரிசாக வந்த கைகடிகாரத்தை வெறித்தனமாக தட்டி கொண்டிருந்தார் ராஜன். நான்கைந்து முறை தட்டினால் தான் ஓடும் அதுவும் 8 மணிநேரம் தான்.


“அத தூக்கிப் போட்டுட்டு வேற வாங்கலாம் ல” என்றார் லட்சுமி


“வர வருமானத்துல எங்கேர்ந்து..... இத என்னிக்கு தான் திருத்த போறனோ, இதே போல திருந்தாதது நிறைய வீட்ல இருக்கு” என்று அந்த சமயத்தையும் தன் மகனை குத்தி காட்ட பயன் படுத்தி கொண்டார் ராஜன். சாப்பிடுவதற்காகக் உட்கார்ந்த கோகுல் சாப்பிடாமல் தந்தை தன்னை மறைமுகமாக திட்டியதைக் கேட்டு எதுவும் பேசாமல் கல்லூரி பையை எடுத்துக் கிளம்பினான்.


உடனே... “காலேஜ்லேர்ந்து வரும் போது வீரண்ணன் கிட்ட சீட்டு துட்டு எவ்ளோன்னு கேட்டுவரச்சொல்லு” என்று தன் மகனுக்கு உரைப்பதைப் போல் தன் மனைவிக்குச் சொன்னார்.


அங்கிருந்து “அதெல்லாம் என்னால செய்ய முடியாது நான் ஒன்னும் இந்த வீட்டு வேலக்காரன் இல்ல” என்று கோகுலின் குரல் ஒலித்தது.


“வர...வர... கழுதைக்கு திமிரு ஏறிடுச்சு ஒரு நாள் வெச்சுக்கிறேன்” என்று பையை எடுத்து கொண்டு வேகமாக கிளம்பினர் ராஜன்.


பொழுது விடிஞ்சு பொழுது சாஞ்சா இந்த சண்டைகளுக்கு நடுவே உழன்றுழன்று எந்த விட சலனமும் இன்றி வேலையை தொடர்ந்தார் கோகுலின் அம்மா.


மறுநாளும் அதே காட்சி... பல நாளுக்கு முன்பே காலாவதி ஆனா தன் கைக் கடிகாரத்தை தட்டி கொடுத்திருந்தார் ராஜன். கல்லூரிக்கு கிளம்பும் நேரத்தில் அடுப்படியில் இருக்கும் அம்மாவிடம் சென்று


“ம்மா  300ரூபா காலேஜ்க்கு வேணும் ம்மா” என்றான் கோகுல்.


“என்னது! 300ரூபாவா எதுக்கு அவ்ளோ காசு இரண்டுவாரத்துக்கு முன்னாடி தானே ஆயிர ரூபா வாங்கனே, போனவாரம் 400ரூபா  வாங்கன... என்ன விளையாட்ரியா” என்று கோகுலின் வருமானத்தைத் இலவசமாகத் தணிக்கை செய்து கொண்டிருந்தாள் அவன் அம்மா.


“நா.. என்ன ம்மா... பன்றது காலேஜ்ல கேக்றாங்க” என்றான்.


“சரி ப்போ... இப்ப இல்ல வார கடைசியில வாங்கிக்கோ”.


இத்தனையையும்... கேட்டும் கேக்காததுப் போல் தன் தட்டும் வேலையை தொடர்ந்தார் ராஜன்.


கோகுல் வீட்டை விட்டு கிளம்பியா உடன் “எதுக்காம் 400 ரூபா ???” என்றார் மனைவியிடம்.


“எதோ காலேஜ்க்கு தரணுமாம் எதுக்குன்னு தெரில” என்றார் லட்சுமி.


“இங்க என்ன பணம் மரத்தலியா காய்க்குது..., ஊரு கெட்டுப் போயிருக்கு.... இது என்னத்த பன்ன பொய் சொல்லி காசு வாங்குதோ” என்று சிறிது கூட தயக்கமே இல்லாமல் பேசினார் ராஜன்.


“என் புள்ள தப்பு செய்யாது தேவ இல்லாம பேசாதீங்க” என்று புள்ளைக்கு வக்காளத்து வாங்கினால் இலட்சுமி.


“ஆமா உன் புள்ளைய நீ தான் மெச்சிக்கணும், நீ வேனும்னா பாரு” என்று கிடைத்த வாய்ப்பை வழக்கம் போல் மகனை வசைப்பாடப் பயன் படுத்திக் கொண்டார்.


அன்று சனிக்கிழமை... காலை வழக்கம் போல் தட்டும் வேலை...


கோகுல் அம்மாவிடம் சென்று “ம்மா... காசு” பருப்பு டப்பாவில் சுற்றி வைத்திருந்த 400 ரூபாவை எடுத்து தந்தாள் இலட்சுமி. மகிழ்ச்சியில் சந்தோசமாக கல்லூரிக்கு கிளம்பினான்.


அப்போது ராஜன் “இதெல்லாம் எங்கேர்ந்து உருப்டப்போது” என்றார். அடுத்த நிமிடத்தில் “அம்மா... ரொம்ப உருப்ட்டது இங்க இருக்கு பாரும்மா” என்று சொல்லி ஓடி விட்டான் கோகுல். வேறெதுவும் பேச முடியாமல் கோபத்தை கைக்கடிகாரத்தில் காட்டினர் ராஜன்.


அன்று இரவு 10 மணி ஆகியும் கோகுல் வீடு திரும்ப வில்லை. வழக்கமாக 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடும் மகன் பத்து மணி ஆகியும் வரவில்லையே என்று பதற்றத்துடன் வாசலில் இருந்தால் லட்சுமி.


மனத்திற்குள் ஒரு பயம் இருந்தாலும் “எங்க குடிச்சிட்டு கும்மாளம் போடுதோ, நீ தானே காசு கொடுத்து அனுப்புன இப்ப அழு” என்று ஆரம்பித்து விட்டார் ராஜன்.


சரியாக 10.15க்கு வீட்டிற்கு வந்தான் கோகுல் “எங்கடப் போன ???” என்றார் இலட்சுமி “இல்லமா ப்ராஜெக்ட்க் காக ப்ரௌஸ் பண்ண வேண்டியது இருந்தது அதான் ப்ரெண்டு வீட்ல இருந்தேன்” என்றான். அவன் பேசிக் கொண்டிற்கும் பொழுது கோகுலின் ஆருகில் சென்று இரண்டு மூன்று தடவை மோப்பம் பிடித்தார் ராஜன்.


சரி முகம் கழுவிக்கிட்டு வந்து சாப்டு” என்றால் லட்சுமி. கோகுல் சட்டையை கழட்டி ஆணியில் மாட்டி விட்டு முகம் கழுவ சென்றான்.


இலட்சுமி ராஜனிடம் “ஏன் அவன அப்டி மோப்பம் புடிச்சீங்க” என்றால் அதற்கு “அவன் குடிச்சிட்டு வந்திர்கானன்னு செக் பண்ணேன்” “நீங்க திருந்தவே மாட்டீங்க” என்று சமையலறை சென்றார் லட்சுமி.


ராஜன் விறுவிறென்று கோகுலின் சட்டைப் பாக்கெட்டை துழாவிப் பார்த்தார் எதுவும் சிக்கவில்லை. இதை முகம் கழுவிவிட்டு வரும்போது கோகுல் பார்த்து விட்டான் ஆனால் ஏதும் பேசாமல் சென்று சாப்பிட்டான். பிறகு அனைவரும் படுக்க சென்றனர்.


கோகுலின் மனது மட்டும் தன் தந்தையின் நடவடிக்கையால் மிகவும் ரணமாக இருந்தது. “என்னத் தான் கெட்டுப் போக வாய்ப்புக் கிடைத்தாளும் சபலப் படாதவன்” என்று தன் நண்பர் வட்டத்தில் பாராட்டுக்கள் பெற்றிருப்பவன் கோகுல் இந்நிலையில் நடந்த நிகழ்ச்சிகள்  அவனை வாட்டி எடுத்தன “நா... என்னதான் அவருக்கு பன்னேன் எப்பயுமே என்ன எதிரியாவே பார்க்கறாரு” என்று மனதிற்குள்ளேயே புலம்பி, விழியோரம் நீர் வடியத் தூங்கினான்.


மறுநாள் வழக்கத்தை விட சற்று மங்களகரமாக இருந்தார் லட்சுமி “என்னடி இன்னிக்கு பளிச்சுன்னு இருக்க என்ன விசேஷம்” என்றார் ராஜன்.


“ம்..ம்..ம்..ம்... உங்க கடிகாரத்துக்கு வயசு 25  ஆச்சு” என்றால் குத்தலாக.


சற்று சுதாரித்துக் கொண்டு “ஒ... இன்னிக்கு நம்ம கல்யாண நாளா... சிறைப் பட்டு 25வருஷமாச்சா” என்றார் கிண்டலாக “நீங்களா ? நானா ?” என்று பதிலே கேள்வியாக வர பதில் ஏதும் கூற முடியாமல் கைகடிகாரத்தைப் பார்த்து (மனத்திற்குள் மனைவியை பார்த்து) “இத என்னிக்கு தான் மாத்தா போறேனோ” என்று சொல்லும் பொழுது ஒரு டப்பாவை ராஜன் முன் நீட்டினான் கோகுல்.


“என்னதிது ???” என்றார் ராஜன்


“தொறந்து பாருங்க” என்றான் கோகுல்.


அதை வாங்கி திறந்து உள்ளே இருக்கும் பொருளை எடுத்தார் ராஜன். கண்ணை பறிக்கும் தகத் தக என்று மின்னும் கோல்ட் பிளேட்டிங் கொண்ட டைட்டன் கைக்கடிகாரம் மதிப்பு சுமார் 3500 ரூபாய் இருக்கும்.


“காலேஜ் சேர்ந்ததுலேர்ந்து, தரக் காசுல சேத்துவச்சு வாங்கினதுத் தான்.... கொடுத்த காச சிகரெட் குடிச்சிட்டு, தண்ணி அடிச்சிட்டு கும்மாளம் போடல..... கைக்கடிகாரத்தத் திருத்தனும்னுச் சொன்னீங்க... திருத்திட்டேன்... வீட்ல இருக்குறச் சிலதத் திருத்தனும்னு சொன்னீங்க அதெல்லாம் எப்பயுமே கரெக்ட்டா தான் இருக்கு” என்று சொல்லி நன்பனை பார்க்க வெளியில் கிளம்பினான்.


எதிர்த்து பேச வாயில்லாமல்..... கையில் கைக்கடிகாரத்துடன் “திருந்த வேண்டியது நீ தான்” என்று சொல்லாமல் சொல்லி விட்டு போறான் என்பதை புரிந்து கண்களில் ஓரம் கண்ணீருடன் ராஜன்..............


“நீராக வடிந்தது அவர் கண்ணீர் மட்டும் அல்ல இத்தனை நாளாய் தன் மகனை எதிரியாகப் பார்த்த அவர் கண்ணோட்டமும் இருவருக்கும் இடையில் இருந்த பனிமலையும் தான்”


இந்த கதையை படித்துவிட்டு தந்தை மீதே எல்லா தவறும்..... என்ற கண்ணோட்டத்துக்கு வந்து விடாதீர்கள். கண்டிப்பாக இருந்தால் தான் மகன் ஒழுக்கத்தோடு வளர்வான் என்ற ஒரு நல்ல எண்ணத்தினால் கூட ராஜன் அப்படி நடந்திருக்கலாம்.


தந்தை மகன் என்ற உறவு சற்று வித்தியாசமான உறவு. இந்த உறவில் உணர்வு என்பது குறைவு தான் இந்த உறவை எதன்கூடவும் ஒப்பிடமுடியாது எப்போதுமே இந்த உறவில் ஒரு பெரிய இடைவேளி (GAP or BARRIER)  இருக்கத்தான் செய்கிறது. ஒரு மகன் உலகத்தை பார்க்கும் விதத்தை முதல் குருவான தன் தந்தையிடம் தான் கற்றுகொள்கிறான் அதற்குரிய  மரியாதையை தந்தைக்கும், உலகம் இன்னதென்று அறிந்த பிறகு அவன் செய்வது சரியானதாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையை தந்தை  மகனுக்கும் தரவேண்டும். இந்த மரியாதையும், நம்பிக்கையும் இருந்தால் தந்தை மகன் உறவு இனிமையாகவும் வலிமையாகவும் அமையும்.


ராஜனுக்கு முற்றிலும் எதிர்மறையான குணத்தைக் கொண்ட தந்தைக்கு மகனாக


ஸ்ரீ


PLEASE COMMENT DOWN....


FORGIVE TYPO ERRORS


FOLLOW MY PAGE

Wednesday, January 8, 2014

MODERN DAY GIRLS & MODERN DAY KAATHAL

MODERN DAY GIRLS & MODERN DAY KAATHAL


ஒர் ஆடவன் தன் காதல் அனுபவத்தை விவரித்தான்

முதலில் பார்த்தால்
பின் சிரித்தால்
சமிங்க்ஜைச் செய்தால்
அருகில் அமர்ந்தால்
செய்தோம் காதல்
பின் ஒரு நாள் தந்தாள் அவள் திருமண நோட்டீஸ்
அன்று அவள் கொடுத்தது திருமண நோட்டீஸ் அல்ல
என் வாழ்க்கைக்கு அவள் தந்த நோட்டீஸ்

கா”தல்” #MODERN DAY பெண்கள் ஆண்களுக்கு தரும் க”ல்தா”
#MODERN DAY GIRLS & #MODERN DAY KAATHAL
 
******************************************************************************************************************
ஒரு ஆண் வருத்தமாக அமர்ந்திருந்தான்
 
என்ன என்றேன்... காதல் தோல்வி என்றான்...என்ன ஆயிற்று என்றேன்... அதற்குஅவள் நான் நினைத்தது போல இல்லை

ரொம்ப மோசம் எனக்கு நேர் எதிர்மார் என்றான்

நான் அட மடையா நீ வைத்தது

உன் காதல் மேல் நம்பிக்கை இல்லை உன் காதலி மேல்

"காதலை நம்பு காதலியை அல்ல"

த்ரிஷா இல்லனா திவ்யா அதுவும் இல்லனா தீபிகா

"நமக்கு ஆயிரம் பொண்ணுங்க மடியும் மச்சி "

#MODERN DAY GIRLS & #MODERN DAY KAATHAL

ஸ்ரீ

fav

Popular Posts

Pages

my fav

Powered by Blogger.

Find Us On Facebook

Conncet With Us