வியர்வைத் துளி
இலக்கை அடையாமல் தோல்வி அடையும்போது வரும் வியர்வைத் துளிகளும் நீராகும் என் வெற்றி என்னும் செடிகளுக்கு
மரியாதை
மாலைப் போட்டு தாடி வைத்தால் சந்நியாசி
காசில்லாமல் தாடி வைத்தால் பரதேசி
மரியாதை மனிதர்க்கா மாலைக்கா...?
விடிந்தது
விடிந்தால் வினைத்தீரும் என்று
விண்ணைநோக்கி கண்ணயர்ந்தேன்
விடிந்ததுக் காலை
தீர்ந்தது இரவு.......
கோபிகை
காரிருள் காலையைக் கலைத்தக் காரிகை
வளைவு நெளிவுகள் உள்ள ஆபகை
கூந்தலோ வாரிமுடிந்த வாசிகை
சின்னத் தூரிகையால் வரைந்த தாரிகை
இந்தக் கண்ணனுக்கேத்த கோபிகை
இழுக்கு
வாழ்க்கைக்கு வேண்டுவதை, வேண்டுவதை விடுத்து வேண்டாததை வேண்டுதலும்
வேண்டியவர் வேண்டாதவர் ஆகியப்பின் வேண்டாதவருக்கு வேண்டாதது வேண்டும் என்று வேண்டுவோரும்
வேண்டாதது வேண்டியப்பின் நடக்கவில்லை என்றால் வேண்டியவனிடமே வேதனையை காட்டுபவனும் இவ்வுலகுக்கு இழுக்கு.
வயக்கம்
தயக்கத்துடன் எட்டி பார்க்கும் சூரியன்
மயக்கத்துடன் கட்டிலில் நான்
கயக்கத்தொடு வாழ்வு என்றாலும்
இயக்கமின்றி இல்லை நான்
வயக்கம் வரும் ஒரு நாள் என்ற எதிர்பார்ப்பில்