my day to day experiences

Tuesday, July 8, 2014

கிறுக்கல்ஸ் – பாகம் 3

கால் கட்டுன்னா செத்தப்பின் பிணத்தோட காலக் கட்டுவாங்களே அதானே ?

சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்கறதுக்கும் கால் கட்டு தான் சொல்வாங்க

அந்த காலத்தலையே டபுள் மீனிங்லப்  பேச ஆரமித்துவிட்டான் தமிழன்


 சமாளிப்(பூ) 

காதல் பரிசாக “காகிதப் பூவை” ஏன் கொடுத்தேன் தெரியுமா???

நம் காதல் நினைவுகள் மட்டுமின்றி “பரிசுகளும்” வாடிவிட கூடாதென்பதற்காக

 


சிற்பி 

காலில் மிதிப்பட்ட கல்லும் கடவுள் ஆகலாம்

அதை சரியானச் சிற்பி செதுக்கினால்


புனிதம்

பசிக்காக திருடாமல், புசிப்பதால் - என் பார்வையில்

ஒரு வேசியும் புனிதமடைகிறாள்


பிசாசு

அன்று கல்வி கற்க தடையாய் இருந்தது சாதிப் பிசாசு

இன்று கல்வி கற்க தடையாய் இருப்பது பணப் பிசாசு

அன்று முதல் இன்று வரை பிசாசு வகைகள் தான் மாறுகிறது

பிசாசு அப்படியே தான் இருக்கிறது

 

 

ஸ்ரீ

fav

Popular Posts

Pages

my fav

Powered by Blogger.

Find Us On Facebook

Conncet With Us