குழந்தையின் சிரிப்பில் இறைவன்
நான் நாத்திகன் என்பதையும் மறந்தேன்
அந்த மழலையின் சிரிப்பில்......
கருமி
அழகான உலகை படைத்த - கடவுள்
பிறக்கும் போதே சிலரின் கண்ணை அடைத்த - கடவுள்
ஈரேழுலகில் தோன்றிய இனி தோன்றும் கருமிகளில் கருமி - கடவுள்
சமம்
கலை இல்லாத சிலையும்
அலை இல்லாத கடலும்
இலை இல்லாத கிளையும்
கிளை இல்லாத மரமும்
திளை இல்லாத வேலையும்
வலை இல்லாத மீனவனும்
மிளை இல்லாத நாடும்
அளை இல்லாத மலையும்
உளை இல்லாத சிங்கமும்
நிலை இல்லாத வாழ்கைக்கு சமம்
நட்பு
காதலில் தோல்வியை ஏற்றுகொள்ளும் உலகம்
நட்பில் தோல்வியை ஏற்க மறுக்கிறது
புரட்சி
புரட்சி இன்றி பரவுகிறது
“பர்தா” கலாச்சாரம் தமிழ்நாட்டு வண்டி ஓட்டும் பெண்களால்
ஸ்ரீ
0 comments:
Post a Comment