my day to day experiences

Friday, August 1, 2014

கிறுக்கல்ஸ் – பாகம் 4

வம்பு 



எப்பொழுதுமே கடவுளையே வம்பிழுக்கிறாய் அவ்ளோ தயிரியமா??????


ஆம் அவர் தான் பதிலுக்கு ஏதும் பேசமாட்டார் என்ற தயிரியம்







பள்ளி கூடம்



படித்த அடிமைகளை உருவாக்கும்


கட்டுப்பாடான தொழிற்சாலை







அழகு



காலை மாலை பள்ளி சென்று கூட்டி வந்தாளும்


பள்ளியின் அனைத்து தாள்களிலும்


தகப்பன் என்ற இடத்தில் கையொப்பம் இட்டாலும்


பிள்ளை எத்தனையாவது படிக்குதுன்னு கேக்கும்பொழுது


தெரியாமல் விழிக்கும் ஒவ்வொரு


தகப்பனின் இன்னொசென்ஸ்சும் (innocence) அழகு தான்







எரித்துவிடு



சில மனிதர்களின் வார்த்தைகளை எதிர்த்து நிற்பதை விட


எரித்து விட்டு செல்வது எவ்வளவோ மேல்







கோலம்



உன் வீட்டு கோலமாக இருக்க விரும்புகிறேன்


அப்பொழுது தான் நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்து


உன்னை சந்தோசபடுத்த முடியும்


 

                                                                                                                                                                                      ஸ்ரீ

fav

Popular Posts

Pages

my fav

Powered by Blogger.

Find Us On Facebook

Conncet With Us